இந்த மூஞ்சில ரொமான்ஸ் வராதே.! பிரபல ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சசிகுமாரா…

ஒரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது இதனை பார்த்து ரசிகர்கள் பொங்கலுக்கு வடகறி காம்பினேஷன்தான் என்று கூறி வருகிறார்கள்.

1983 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான முந்தானை முடிச்சு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பாக்யராஜின் திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கியமான திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி தானே நடித்திருப்பார் நடிகர் பாக்யராஜ். இதனை தொடர்ந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகப் போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது முந்தானை முடிச்சு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர்களுடன் சேர்ந்து நடிகர் பாக்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஹீரோ சசிகுமார் தான் என்பதை யாரும் யோசிக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது ஏனென்றால் சசிகுமாருக்கு பாக்யராஜ் போல அசடு வழியும் கேரக்டரில் நடிக்க செட் ஆவாரா என்பது தெரியவில்லை இதுவரை சசிகுமாரை அந்த மாதிரி பார்த்ததில்லை.

தற்போது முந்தானை முடிச்சு படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் யார் என்று கூறாமல் இருக்கிறார்கள் விரைவில் இந்த திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு ஹீரோ சசிகுமார் தான் என்றவுடன் சந்தானம் சொல்வது போல பொங்களுக்கு வடகறி என்ற காம்பினேஷனில் தான் அதிரடியாக இந்த படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் குன்னூரில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment