இந்த வாய்ப்பை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என கூறிய ரோஜா பட நடிகை..

பொதுவாக சினிமாவில் நடிகைகளை பொருத்தவரை அவர்களுடைய இளமை குறையும் வரை மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பலரும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்கள் இன்னும் சிலர் வாய்ப்பு குறைய தொடங்கிய நிலையில் திரைப்படங்களை விட்டு விலகி விடுகிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை மதுபாலா.இவர் 90 கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கருணையாகத் வாழ்ந்தார் பிறகு ஏராளமான முன்னணியின் நடிகர்களுடன் நடித்து வந்த இவர் மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருந்த ரோஜா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்ததோடு மட்டுமல்லாமல் சினிமாவில் பெருமையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் அந்த அளவுக்கு ரொமான்ஸ் கதை,பாடல்கள், டயலாக் என அனைத்தும் இதயத்தின் அழகினை வெளிப்படுத்தியது.கணவன், மனைவி என்றால் இப்படிதான் காதலித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அளவிற்கு இந்த படத்தின் கதை இருந்த காரணத்தினால் நடிகை மதுபாலாவும் கதைக்கு ஏற்றார் போல் தனது அழகான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

mathupala
mathupala

இவ்வாறு இருக்க அந்த காலகட்டத்தில் மதுபாலா மற்றும் அரவிந்த்சாமி இருவருமே ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளாக மாறினர். மேலும் இதே போன்ற கதை அம்சமுள்ள ஒரு படம் வராதா என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள் அந்த அளவிற்கு மதுபாலா தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் எப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இவர் ரோஜா படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்துள்ளார் மேலும் தகவல்கள் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது.

அதாவது ரோஜா படத்தில் ஒருவேளை நீங்கள் இல்லாமல் வேறு யாராவது நடிக்க வேண்டும் என்றால் எந்த ஹீரோயினை சொல்வீர்கள் என கேட்டதற்கு மதுபாலா யாரையும் நடிக்க விடமாட்டேன் மணிரத்தினம் சார் படம் தவறவிட மாட்டேன் மற்றும் நான் இந்த படத்தில் என்னுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறேன் நன்றாக பண்ணுகிறேன் என எனக்கும் தெரிந்தது எனக் கூறியுள்ளார்.

Leave a Comment