தமிழக வீரர் “அஸ்வின்” எப்படிப்பட்ட வீரர் என்பதை கோலியை விட ரோஹித் நன்கு புரிந்து வைத்துயுள்ளார் – ரசிகர்களை கவர்ந்த செய்தி.

இந்திய அணியில் புதிய கேப்டன் ரோகித் சர்மா 20 ஓவர் பார்மர் மாற்றி உள்ளார் மேலும் புதிய பயிற்சியாளராக ராகுல் நியமிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தி வருகிறனர். சமிபத்தில் நடந்த இந்தியா நியூசிலாந்து இடையிலான 3 -0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை சிறப்பாக கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து அசத்தினார் அதற்காக 3 போட்டிகளும் ஒரே ஒரு வீரருக்கு மட்டும் விளையாட வைக்காமல் பல்வேறு மாற்றங்களை செய்து ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களது திறமையை வெளிகாட்ட வைத்துள்ளார் அந்த வகையில் நீண்ட காலமாக ஒருநாள் மற்றும் டி20 ஓவர் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அஸ்வினை கேப்டன் ரோகித் சர்மா எனக்கு அவர்தான் வேண்டும் என கூறியதை அடுத்து அவரும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

அஸ்வின் தான் தனது முதல் ஆயுதமாக கருதிய ரோகித் சர்மா அவரை களத்தில் இறங்கினார் சும்மா சொல்லக்கூடாது உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து எதிரான 20 ஓவர் போட்டிகளில் தனது அபார பந்து வீச்சை வெளிப்படுத்தி எதிர் அணியின் ரன் விகிதத்தை குறைத்த மேலும் விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

இவரைப் போன்ற ஒரு  வீரரை உணராது விராட்கோலி பல வருடங்கள் பெஞ்சில் உட்கார வைத்துவிட்டார் ஆனால் ரோகித் சர்மா இவரின் திறமையை சரியாக கணித்து தற்போது முதல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார் ரோஹித் சர்மா அஸ்வினை அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடவைப்பார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அஸ்வின் குறித்து பேசிய ரோகித் சர்மா : அஸ்வின் இது ஒரு சிறந்த கம்பேக் ஆகும் அவர் தரமான பவுலர் எனபது அனைவருக்கும் தெரியும் டெஸ்ட் போட்டிகள் விளையாண்டலும் ஒருநாள், T20 போட்டிகளில் இத்தனை ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார் அவரிடம் மோசமான ரெக்கார்டு என்பது இல்லவே இல்லை அவரின் தரத்தை அனைவரும் அறிவோம் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் நான் நினைக்கும் முதன்மையான ஆள் அஸ்வின் தான் அவரை போன்ற வீரர் அணியில் வைத்திருந்தால் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பதற்கு எப்பொழுது வேண்டுமானாலும் வாய்ப்பு அமையும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Leave a Comment