வெண்பாவிடம் மொத்த உண்மையையும் உளறிய ரோஹித் – அதிர்ச்சியில் உறைந்திருக்கும் வீடு.! பாரதிகண்ணம்மாவின் இன்றைய எபிசோட்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி யில் டாப்பில் இருந்து வரும் பாரதி கண்ணம்மா தொடரின் இன்றைய எபிசோடில் ரோகித்தை கண்காணிக்க சென்ற வெண்பா மற்றும் சாந்தி இருவரும் அவரின் காரை மிஸ் செய்து புலம்பிய நிலையில் ஒருவழியாக ரோகித்தை கண்டுபிடித்து விட்டனர்.

ரோகித் அவனுடைய நண்பனை பார்த்து பணம் கொடுக்கும் போது அந்த நண்பன் ரோஹித்திடம் காலையில் உனக்கு போன் செய்தேன் அப்போ வேற யாரோ எடுத்தாங்க யாருன்னு தெரியாம நான் மாமியார் கிட்ட பணத்தை உஷார் பண்ணிட்டியா என கேட்டேன்.

அப்ப லேடிஸ் குரல் கேட்டதால் நான் உடனே ராங் நம்பர் என்று போனை வைத்து விட்டேன் வீட்டில் ஏதாவது பிரச்சனையா எனக் கேட்டார். ரோஹித் பதட்டத்துடன் யார் பேசியது பேர் ஏதாவது சொன்னாங்களா வெண்பான்னு சொன்னாங்களா என கேட்கதற்கு சாந்தின்னு சொன்னாங்க எனக் கூறினார்.

பிறகு ரோகித் வெண்பாவிற்கு கண்டிப்பாக சந்தேகம் வந்து இருக்கும் எப்படி சமாளிப்பது என ஒரு பக்கம் திட்டம் போட்டு வருகிறார். பின்புரோகித் வீட்டிற்கு வந்ததும் வெண்பா ரோகித்திடம் நீ யாரென்று தெரியும் பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுக்க முடியவில்லை பணக்காரன் என்று என்னையும் என் அம்மாவையும் ஏமாற்றிக்கிட்டு இருக்க..

venba
venba

உண்மையை சொல் நீ யாரு என வெண்பா கேட்டதும் ரோஹித் உண்மையை சொல்கிறேன் நான் ரோகித் சாரதி. என்ன பாத்து பிராடுன்னு சொல்றியே நீ சொல்லலாமா இதெல்லாம் அப்படின்னு வெண்பாவை கேட்க வெண்பா ஷாக் ஆகிய நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது

Leave a Comment