கஷ்டத்தில் வாழும் 3000 தொழிலாளர்களுக்கு மாபெரும் உதவி செய்த ராக்கி பாய் யாஷ்.!

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் என்றால் அது கேஜிஎஃப் திரைப்படம் தான் இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல விமர்சனத்தை மக்களிடையே பெற்றது.

மேலும் இதில் கதாநாயகனாக நடித்த யாஷ் தமிழ்நாட்டில் அதிகப்படியான ரசிகர்களைக் சேர்த்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

கேஜிஎஃப் முதல் பாகம் ரசிகர்களிடையே பல கோடி வசூல் செய்ததால் இந்த திரைப்படத்தின் 2வது பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது அதுமட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள யாஷ் தற்பொழுது கொரோனாவால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருக்கிறதால் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையாக கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி நிதி உதவி செய்துள்ளார் யாஷ் 21துறைகளை சேர்ந்த 3000தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு ரூபாய் 5000செலுத்தப்படும் என தனது  சமூக வலைதள பக்கங்களில் ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளார்.

yash

யாஷ் செய்த இந்த நல்ல விஷயத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் இவரைப் பாராட்டி வருவது மட்டுமல்லாமல் இதனால் தான் நீங்கள் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என கூறி வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் உங்களது கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு நாங்கள் மிக ஆவலுடன் இருக்கிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version