வசூல் மழையில் “மாதவனின் ராக்கெட்ரி” – 8 நாள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்த மாதவன் ஒரு கட்டத்திற்கு மேல் தனது அனைத்து திறமைகளையும் வெளி காட்ட ஆரம்பித்தார் அந்த வகையில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தற்போது பயணிக்க தொடங்கியுள்ளார் மாதவன்.  நம்பி நாராயணன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒரு கதையை இயக்கி  உள்ளார் அந்த படத்திற்கு ராக்கெட்ரி என பெயர் வைக்கப்பட்டது.

ராக்கெட்ரி படத்தில் மாதவனும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவருடன் இணைந்து ஷாருக்கான், சிம்ரன், சூரியா, நிஷா கோஷல், தினேஷ் பிரபாகர், வின்சென்ட், ரியோடா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தினர். ஜூலை ஒன்றாம் தேதி வெளியான  ராக்கெட்ரி படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் படம் ரிலீஸ் ஆனது.

படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தினால் தொடர்ந்து வசூலிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்க ஆரம்பித்தது. முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டுமே சுமார் 8.70 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்தது.

காரணம் படம் தொடர்ந்து நேர்மையான விமர்சனங்களை பெற்றதால் மக்கள் இந்த படத்தை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் அதனால் இந்த படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்தது. ஒரு வாரத்தை கடந்த பிறகும் கோடிகளில் வசூல் செய்து கொண்டிருந்தது மாதவனின்  ராக்கெட்ரி.

இந்த படம் இது வரையில் ஓவராக சுமார் 15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன இன்னும் இந்த திரைப்படம் 10 கோடிக்கு மேல் வசூல் அள்ளும் என கணிக்கப்படுகிறது. ஏனென்றால் இப்பொழுது தான் இந்த படத்தை பார்க்க வருபவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment