குளிச்சிட்டு வந்து பார்க்கையில் “ரிஷப் பண்ட்” அங்கு இல்லை.. ரகசியத்தை உடைக்கும் கே எல் ராகுல்.!

இந்திய அணி ஆசிய கோப்பை, நியூசிலாந்து தொடரை தொடர்ந்து பங்களாதேஷ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.  பங்களாதேஷ் உடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது.

அதுவும் இந்த போட்டியில் இந்திய அணி ஜெயிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. இல்லையென்றால் ஒரு நாள் தொடர்கான கோப்பை பறிபோகும்.. இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பங்களாதேஷ் ஊடனான  முதல் போட்டியில் திடீரென கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக இருந்தார்.

இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது அப்போ  ரிஷப் பண்ட் என்னதான் ஆச்சு என பலரும் கேள்வி எழுப்பினர் ஆனால் பிசிசிஐ சொல்லி உள்ளது என்னவென்றால் பங்களாதேஷுடன் தொடரில் பண்ட் நீக்கப்பட்டுள்ளார் மருத்துவர்கள் ஆலோசனைக்கு பிறகு தான் அவர் அணிக்கு மீண்டும் வருவார் என கூறியது..

ஆனால் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டது குறித்து சரியான காரணம் இன்னும் வெளிவரவில்லை… இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்பொழுது செயல்பட்டு வரும் கே.எல் ராகுல் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது..

பண்ட் இல்லாத விஷயம் எனக்கு தெரியவே தெரியாது. நான் குளித்துவிட்டு வந்து பார்க்கையில் பண்ட் இல்லை… அணி நிர்வாகம் நீ தான் இந்த மேட்சில் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டது. நான் அணிக்காக எந்த ஒரு பொறுப்பையும் செய்ய ரெடியாக இருக்கிறேன் என கூறினார் இனிவரும் போட்டிகளில் கூட விக்கெட் கீப்பராக செயல்பட ரெடியாகி இருக்கிறேன் என கூறி முடித்துள்ளார்.

Leave a Comment