சாய்பல்லவியின் தங்கை ஹீரோயினாக நடிக்கும் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் பிரபல நடிகை.!! அதுவும் இரண்டாவது ஹீரோயினா.! வைரலாகும் புகைப்படம்.

பொதுவாக பல நடிகைகள் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் உள்ளார்கள். ஆனால் இவர்கள் திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் நடிக்க விரும்பவில்லை. பணக்கார தொழிலதிபர்களை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.

அந்தவகையில் பத்து வருடத்திற்கு முன்பு நடிகர் பரத்துடன் நடித்த நடிகை தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்தவகையில் நடிகர் பரத் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த யுவன் யுவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரீமா கல்லிங்கல்.

இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன்பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு மலையாளத்தில் பிரபல இயக்குனர் பாசில் அபுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்தவகையில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அசத்தியவர் ஸ்டண்ட் சில்வா. இவர் தற்போது புதிதாக இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். அந்த வகையில் இவர் இயக்க உள்ள இத்திரைப்படத்தில் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இத்திரைப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் விஜய் எழுத உள்ளார். அந்தவகையில் இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ரீமா கல்லிங்கல் நடிக்கவுள்ளார்.

rima-kallingal-beautiful-photo
rima-kallingal-beautiful-photo
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment