மூன்று குழந்தைக்கு அம்மாவா சத்தியமா நம்ப மாட்டாங்க.! வீடியோவை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.

நடிகை ரேஷ்மா தொலைக்காட்சிகள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் 2007ஆம் ஆண்டு தெலுங்கில் லவ் டாக்டர் என்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார், அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு சன் சிங்கர் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்பு 10 மணி கதைகள் என்ற நிகழ்ச்சியிலும் பின்பு வாணி ராணி சீரியலிலும் நடித்து பிரபலம் அடைந்தார்.

சன் தொலைக்காட்சியில் வம்சம் சீரியலில் நடித்திருந்தார், இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த ரேஷ்மா விற்கு 2015 ஆம் ஆண்டு பட வாய்ப்பு கிடைத்தது, தமிழில் முதன்முதலாக மசாலா படம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இவர் கரகாட்டக்காரி ஆக நடித்திருந்தார், இந்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது அதனால் மேலும் மேலும் பிரபலமடைந்தார் ரேஷ்மா, பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் ஆனால் இவர் கடைசிவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளன இவர் தற்பொழுது மூன்று குழந்தைகளுக்கு தாய் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்ததுதான், 144 தடையால் மக்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள் அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலம் அடைகிறார்கள், அந்த வகையில் இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மூன்று குழந்தைகளுக்கு தாய் என்றால் நம்பவே முடியவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment