அது என்னுள் கலந்து விட்டது..! நான் எதையும் மறைக்க விரும்பவில்லை – ஓபன்னாக பேசிய ரேகா நாயர்.!

சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான இரவு நிழல் திரைப்படம் தமிழில் முதல் முதலில் சிங்கிள் ஷாட் நான்லினியர் படமாக வெளிவந்தது. இதனால் படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் படத்தை பார்த்து பலரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இரவின் நிழல் திரைப்படம் ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. படம் வெளியாகி 14 நாட்கள் ஆகின்ற நிலையில் 22 கோடிக்கு மேல் வசுலை அள்ளி உள்ளது. படத்தில் இயக்குனர் பார்த்திபன் புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி இருந்தார். அப்படி சின்ன திரை நடிகை ரேகா நாயர்.

இந்த படத்தில் ஒரே நிர்வாண காட்சிகள் நடித்திருந்தார். அது பிரபலமாக பேசப்பட்டது அது குறித்து சில பேட்டிகளில் அவரிடம் கேட்கும்போதும் நான் காட்சியை காட்சியாகவே பார்க்கிறேன் என தில்லாக பேசியுள்ளார். இந்த நிலையில் சமீபத்திய ஒரு நேர்காணல் ஒன்றில் அவரது சமூக வலைதளங்களில் பதிவிடும் கவிதை குறித்தும் பேசியுள்ளார்.

அவர் பேசியது என்னுடைய முகநூல், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் நான் எழுதும் கவிதைகள் காதல் கலந்த காமமாகத்தான் இருக்கும். இதனால் எனக்கு நிறைய பேர் கமெண்டுகளில் காம சூ**நீ என்ற பட்டமும் கொடுத்தாங்க. எனக்கு மறைத்து வாழ தெரியாது அதனால எனக்குள் இருக்கும் காமத்தை காதல் வழியாக வெளிப்படுத்துகிறேன்.

ஒரு ரோஜா பூவை ஒரு பெண்ணோ அல்லது ஆணோ கொடுக்கும்போது உள்ள உணர்வும் அந்த ரோஜாவை கொடுத்து உன்னை பிடிச்சிருக்கு ஒன்னா வாழலாமா என்று கேட்டு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதுபோல் இல்லாமல் கொடுத்தால் அது காமம் தான் வெளிப்படையான உணர்வுக்குள் நான் பயணிக்கிறேன் என அவருக்கு தோன்றியவற்றை வெளிப்படையாக பேசியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version