சிம்புவின் வல்லவன் திரைப்படத்தில் நடித்த ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

பொதுவாக நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுவார்கள். பிறகு சில காரணத்தினால் அவர்கள் நீண்ட காலம் சினிமாவில் நிலைத்து இருக்க முடியாது.

எனவே தனது மார்க்கெட்டிங் குறையத் தொடங்கியதும் பணக்கார தொழிலதிபர்களாக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் மாதவன் நடிப்பில் வெளிவந்த மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ரீமா சென்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் நடித்து சினிமாவில் ஒரு கட்டத்தில் கலக்கி வந்தார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ரீமா சென் தொழிலதிபர் ஒருவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

இவர்களுக்கு ருத்ர வீர சிங் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ரீமா சென் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கமெண்டு செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

reena

Leave a Comment

Exit mobile version