TRPயில் முதலிடத்தை பிடிக்க வில்லி நடிகையை களமிறக்கும் செம்பருத்தி சீரியல் குழு.!

மக்களுக்கு சினிமா படங்களை பார்ப்பதை விட சீரியல்களை பார்ப்பது தான் மிகவும் பிடித்து விடும் ஏனென்றால் சீரியல்களில் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை அப்படியே எடுத்து மக்களுக்கு காட்டுவார்கள் அந்த வகையில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பல சீரியல்கள் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு காலத்தில் TRPயில் உச்சத்தில் இருந்த சீரியல் தான் செம்பருத்தி இதில் ஆதி, பார்வதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்,நடிகை மக்களுக்கும் மிகவும் பிடித்தவர்களாக திகழ்ந்துவிட்டார்கள் அந்த அளவிற்கு இந்த சீரியலில் தனது நடிப்பு திறமைகளை அப்படியே காட்டி இருப்பார்கள்.

நன்றாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் திடீரென்று மாற்றம் மாறியதால் ரசிகர்களிடையே தற்போது நல்ல வரவேற்பு கிடைக்காமல் TRPயில் குறைவான புள்ளிகளைப் பெற்று பெற்று வருகிறது.மீண்டும் இந்த சீரியலை எப்படியாவது TRPயில் உச்சத்தில் ஏற்ற வேண்டும் என்பதற்காக இந்த சீரியலில் புதுப்புது பிரபலங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் சீரியல் குழுவினர்கள்.

அதேபோல் இந்த சீரியலில் தற்போது ஒரு புதிய பிரபலம் இணைய உள்ளார் அந்தப் புதிய பிரபலம் யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை நிறைய ஹிட்டடித்த சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராணி தான் இவர் பிரபல ஹிட்டடித்த சீரியல்களில் வில்லியாக இருந்து தனது நடிப்பை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

rani
rani

மேலும் இவர் இந்த சீரியலில் இணைந்துவிட்டால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என சீரியல் குழுவினர் நம்புகிறார்கள் இதனைப் பற்றி இவர் இந்த சீரியலில் இணைவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment