படம் தான் அது செல்லக் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம்.!

விஜய் டிவியில் திரைப்படங்களின் பெயர்களை வைத்து பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பொதுவாக விஜய் டிவி ரசிகர்களைக்கும் கவரும் வகையில் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார்கள். அதோடு பல புதிய முக நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தி  மற்ற அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் டப் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னனி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி. இந்த இரண்டு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த இரண்டு சீரியல்களையும் இயக்குபவர் பிரவீன் பேண்ட் இவர் சீரியல் நடிகை சாய் ப்ரமோதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சாய் பிரமோதிதா கனவு காணும் காலங்கள் மற்றும் ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் பிரவீன் பேண்ட் மற்றும் சாய் பிரமோதிதா இவர்களுக்கு சமீபத்தில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.  அந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக தனது இன்ஸ்டாகிராம் பதிப்பித்துள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment