ரவீந்தர் போட்ட இன்ஸ்டா பதிவால் விவாகரத்து வரை சென்ற சர்ச்சை.! லாஸ்ட் வார்னிங்காக கண்டித்த மகாலட்சுமி..

சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட ரவீந்தர் மகாலட்சுமி விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் மஹாலட்சுமி. கடந்த சில மாதங்களாக ஹாட் டாபிக்காக பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம்தான் ஓடிக்கொண்டிருந்தது.

இவர்களுடைய திருமணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில் பிறகு அனைத்து சர்ச்சைகளுக்கும் இவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவீந்திரன் பிக்பாஸ் விமர்சகரும் ஆவார்.

முக்கியமாக வனிதா பங்குப்பெற்ற பிக்பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் படித்தொட்டியெங்கும் பிரபலமானது. அதேபோல் வனிதா பீட்டர் பவுல் திருமணம் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் இதனால் வனிதா ரவீந்தருக்கு இடையே மிகப்பெரிய சண்டை இருந்தது. ரவீந்திரன் முதல் மனைவியை விவாகரத்து பெற்ற நிலையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார்.

இவ்வாறு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி ரவீந்தரன் மகாலட்சுமி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் இதனால் விவாகரத்து வரை இவர்களுடைய நிலைமை சென்றுள்ளது.

raveendar 1
raveendar 1

அதாவது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் “வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என பதிவு போட்டிருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் பிரிந்து விட்டதாக கமெண்ட் செய்து வந்தனர். எனவே இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரவீந்தர் மனைவி மகாலட்சுமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mahalakshmi 1
mahalakshmi 1

அதாவது டேய் புருஷா தனியா இருக்க போட்டோ போட தானே எத்தனை டைம் சொன்னேன் இப்போ எல்லா சோசியல் மீடியாவும் நாம பிரிந்து விட்டதாக சொல்கிறார்கள் மவனே இன்னொருவாட்டி இந்த தப்பா பண்ண ஒரு நாளைக்கு மூணு முறை செய்த உப்புமா தான். யூடியூப் சேனல்கள் பற்றிய என்னுடைய கமெண்ட் வாய்ஸ், இன்னுமாடா நாங்க ட்ரெண்டு இதுக்கு இல்லையா ஒரு எண்டு என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment