ரவீந்தர்-மகாலட்சுமி கையில் செருப்பை கொடுத்து புது தம்பதியினர்களை அசிங்கப்படுத்திய விஜய் டிவி.!

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடிக்கு ஒரு மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் தற்பொழுது வரையிலும் சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார்கள். இவர்களுடைய திருமணத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளிவந்த நிலையில் பலரும் அதனை விமர்சித்து வந்தார்கள். மேலும் தொடர்ந்து இவர்களும் தங்களுடைய திருமணத்தைக் குறித்து பல்வேறு ஊடகங்களில் பேட்டியளித்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் விஜய் டிவி தங்களுடைய டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக இந்த ஜோடியை வைத்து பேட்டி எடுப்பதற்காக சேனலுக்கு அழைத்திருந்தார்கள். இது குறித்து காலட்சுமியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பொதுவாக விஜய் டிவியில் ஜோடியாக நடித்தால் அவர்களுக்கு விஜய் டிவியை திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

அப்படி சரவணன் மீனாட்சி சீரியல் நடித்த செந்தில்-ஸ்ரீஜா, ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ்-ஆலியா மானசா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மணிமேகலை-உசைன் போன்ற பலருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அமீர் மற்றும் பாவனிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யூடியூப்பில் விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர். மேலும் இதனைத் தொடர்ந்து வனிதாவின் சொந்த பிரச்சனையின் தலையிட்டு பெரிதும் சிக்கலை ஏற்படுத்தினார். ஆனால் வனிதாவுக்கு ஆதரவாக விஜய் டிவி தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கொடுத்து வந்தது இந்நிலையில் தற்பொழுது ரவீந்தர் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரையும் வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார்கள்.

அதில் ஒரு டாஸ்க் என்று கூறி இவர்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது ஒருவரை ஒருவரை பற்றி ஒருவர் எவ்வாறு புரிந்து இருக்கிறார் என்பதுதான் அந்த டாஸ்க். அதில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் அமர்ந்து கொண்டிருந்தார்கள். மேலும் ஒரே பதிலை இருவதும் சொன்னால் அவர்களுக்கு மார்க் கொடுக்கப்படும் இதற்காக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கையில் ஆண் மற்றும் பெண் செருப்பு கொடுக்கப்படுகிறது.

அந்த கேள்விக்கு பதில் மகாலட்சுமி என்றால் பெண் செருப்பை காட்ட வேண்டும் அதுவே ரவிந்தர் என்றால் ஆண் செருப்பை காட்ட வேண்டும் இவ்வாறு ஒரு பிரபல தயாரிப்பாளர் கையில் செருப்பை கொடுத்து விஜய் டிவி கேவலப்படுத்தி இருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள் அதையும் கூட பொருட்படுத்தாமல் ரவீந்தர் அந்த டாஸ் கை விளையாடியது பலரையும் அதிர்ச்சியின் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment