தன்னை மோசமாக விமர்சித்த வனிதாவிற்கு தரமான பதிலடி கொடுத்த ரவீந்தர்.! இனிதான் இருக்கு பஞ்சாயத்து..

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. தற்பொழுது சோசியல் மீடியாவில் இவர்கள்தான் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை மிஞ்சும் அளவிற்கு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்களை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரையான அனைவரும் விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் ரவீந்தர் நட்பு நாயனான தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பத்திருக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராகவும் இருந்து வந்த நிலையில் முக்கியமாக வனிதா பங்கு பெற்ற பிக்பாஸ் சீசன் 4 அனைவரையும் விமர்சனம் செய்து பிரபலமடைந்தார்.

மேலும் வனிதா பீட்டர் பால் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் அப்பொழுது சோசியல் மீடியாவில் பலரும் வனிதாவை பற்றி விமர்சித்து வந்தார்கள் மேலும் பீட்டர் பால் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்த நிலையில் இவர் திடீரென்று மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் வனிதா திருமணம் விஷயத்தில் இவர் தலையிட்டு மிகப்பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்தினார் ஏற்கனவே திருமணமான ஒருவரை வனிதா திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய தவறு. இவ்வாறு இவர் கூறியிருந்த நிலையில் தற்போது இவ்வாறு நீங்கள் செய்தால் அது சரியா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இதனை மறைமுகமாக வனிதா கூறி இருந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவீந்தர் திருமணத்திற்கு பின்னர் ரவீந்தர் மகாலட்சுமி ஒரு சில பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள்.

அந்த பேட்டில் பேசிய ரவீந்திரன் எங்கள் திருமணத்திற்கு பின்னர் பலரும் மகாலட்சுமி இரண்டாவது திருமணம் செய்து விட்டார் என்ற தலைப்பை போட்டு தான் பலரும் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் இது எனக்கும் இரண்டாவது திருமணம் தான் ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து பெரிதாக யாருக்கும் வெளியில் சொன்னது கிடையாது எனக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாது கல்யாணம் ஆனதுக்கு முன்னாடி இவகிட்ட சேலஞ்ச் பண்ணி சொன்னேன் வனிதா நிச்சயம் எனக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று.

அதேபோல் வனிதா விஜயகுமார் விஷயத்தில் எனக்கு திருமணமான விஷயம் வனிதாவிற்கு நிச்சயம் தெரிந்து இருக்கும் ஒருவேளை நாங்கள் இருவரும் சுமூகமான உறவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் எனக்கு வாழ்த்துக்களை சொல்லி இருப்பார் என்று கூறியிருந்தார்.

Leave a Comment