விஜயுடன் கைகோர்த்த நேரம் பிரமாண்ட பட வாய்ப்பை கைப்பற்றிய ராஷ்மிகா மந்தனா.! ஹீரோ யார் தெரியுமா.?

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா தமிழில் முதல் படமாக கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக படங்களில் கமிட்டாகி நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தான் விஜயின் 66 வது திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். மேலும் ராஷ்மிகா மந்தனா பல பேட்டிகளில் எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும் விஜய் கூட நடிக்க ஆசை என கூறியுள்ளார்.

அதை அடுத்து தற்போது அந்த ஆசை நிறைவேறியதால் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் இந்த படம் எதிர்பாராத அளவு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கியதால் புஷ்பா படத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் ராஷ்மிகா மந்தனாவுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அந்த வகையில் பாலிவுட்டில் கூட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றொரு பெரிய படத்தில் நடிக்க உள்ளாராம் அதன்படி நடிகர் பிரபாஸ் அடுத்து இயக்குனர் சந்தீப் ரெட்டி உடன் கூட்டணி சேரும் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அண்மையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கேஜிஎப் 2 படத்தை இயக்கிய பிரம்மாண்ட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் தற்போது சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே சந்தீப் ரெட்டியுடன் இணையும் படம் தொடங்கும் எனவும் கூறி வருகின்றனர்.

Leave a Comment