தயாரிப்பாளர்களை ஓட ஓட விரட்டும் ராஷ்மிகா..! கிட்ட நெருங்கவே யோசிக்கும் தயாரிப்பாளர்கள்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை ஆகவும் முக்கிய நடிகையாகவும் வளம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ராஷ்மிகா தன்னுடைய கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார்.

அதிலும் நமது நடிகை சமீபத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது இப்படி சினிமாவில் மிக பிஸியாக இருக்கும் நமது நடிகை தன்னுடைய சம்பளத்தை திடீரென நான்கு கோடியாக உயர்த்தியது பலரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளது.

பொதுவாக ஆரம்பத்தில் ஒரு கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி வந்த நமது நடிகை புஷ்பா திரைப்படத்தில் மாபெரும் வெற்றி பெற்றதன் பிறகு தன்னுடைய சம்பளத்தை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரேடியாக சம்பளத்தை உயர்த்தியதன் காரணமாக தயாரிப்பாளர்கள் இவரை வைத்து திரைப்படம் இயக்க யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் சம்பளம் விஷயத்தில் நான் கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ள மாட்டேன் என ராஷ்மிகா மந்தனா கரர்காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் புஷ்பா இரண்டாம் பாகத்தில் கூட நான்கு கோடி ரூபாய் சம்பளத்தை தான் அவர் கமிட் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு சம்பள விஷயத்தில் ஒரே அடியாக கரார் காட்டுவதன் காரணமாக தயாரிப்பாளர்கள் இவரை தங்களுடைய திரைப்படங்களில் புக் செய்வதற்கு யோசிப்பது மட்டுமில்லாமல் ஓட்டம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இதைப் பற்றி ஒருபோதும் ராஷ்மிகா கவலைப்படுவது போல் கிடையாது ஏனெனில் அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இன் நிலையில் சமீபத்தில் விஜய் உடன் ஜோடி போட்டு நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் அவர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவேன் என ராஷ்மிகா தன்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் கூறி வருகிறார் என தெரியவந்துள்ளது.

Leave a Comment