விஜே பிரியங்கா தனது கணவரை பிரிந்ததற்கு காரணம் இது தான்.. உண்மையை உடைத்த பிரபலம்

Vj priyanka: விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. இவருடைய கலகலப்பான சிரிப்பு எதார்த்தமான காமெடி போன்றவை ரசிகர்களை கவர்ந்த நிலையில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார். இவர் முதலில் சுட்டி டிவி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த நிலையில் இதனை அடுத்து மெல்ல மெல்ல உயர்ந்து விஜய் டிவியில் வாய்ப்பினை பெற்றவர்.

இந்நிகழ்ச்சி இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த நிலையில் தற்போது இவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் இவர்கள் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நிலையில் இதன் மூலம் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

எனவே சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் சென்று பங்குப் பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் பிரியங்கா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே பிரியங்கா தனது கணவரைப் பிரிந்து அம்மா, சகோதரர் அவர்களுடன் வாழ்ந்து வருகிறார். அப்படிதான் கடந்த 2021ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது கணவர் பற்றி ஒரு துளி கூட பேசாமல் இருந்தார்.

இந்நிகழ்ச்சிருக்கு பிறகும் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வரும் நிலையில் ஏன் பிரியங்கா தனது கணவரை பிரிந்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது அதற்கு பயில்வான் ரங்கநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது விஜே பிரியங்கா திருமணத்திற்கு பின்பும் தனது தாயார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் வீட்டிற்கு செல்லாமல் தாயை கவனித்து வந்ததால் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அவர்களின் பிரிவிற்கு இதுதான் முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment