செல்லம் ரம்யா பாண்டியனை நாமினேட் செய்ய இப்படி ஒரு காரணமா. கேள்வி கேட்டுப் குழம்பு தள்ளும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களை கடந்து ஒளிபரப்ப பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் நேற்று ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல் நாமினேஷன் நடைபெற்றது, இந்த நாமினேஷனில் சனம் செட்டி வேல்முருகன் ரியோ ஆகியவர்களை நாமினேட் செய்ய முடியாது என கூறிவிட்டார்கள்.

அதனால் இவர்கள் மூன்று பேரும் எஸ்கேப் ஆகி விட்டார்கள் அதேபோல் முதல் வாரம் என்பதால் அர்ச்சனாவையும் நாமினிட் செய்யவில்லை, இந்த நிலையில் மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் செய்தார்கள். அதில் சம்யுக்தா, சோமசேகர், என இருவரும் இந்த லிஸ்டில் இடம் பெறவில்லை.

அதேபோல் அனிதா சம்பத், ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், அஜித் ஆகியோர்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்தார்கள் அதேபோல் கடந்த வாரம் ஏழு பேர் நாமினேட் லிஸ்டில் இடம் பிடித்தார்கள் ஆனால் இந்த வாரம் 5 பேர் மட்டுமே இடம் பிடித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

அப்படி இருக்கும் வகையில் ரம்யா பாண்டியன் நாமினேட் செய்ய ரியோ சொன்ன காரணம்தான் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, மாஸ் டாஸ்கில் தனக்கு மாஸ் கொடுத்து அனைவரும் தன்னிடம் வந்து சாரி சொல்லி விட்டு போனார்கள் ஆனால் ரம்யா பாண்டியன் அவ்வாறு செய்யவில்லை அதனால் அவரை நாமினேட் செய்வதாகவும் ரியோ ராஜ் கூறியிருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு காரணமா என மோசமாக ரியோ ராஜ் அவர்களிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment