தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜீத். இவர்கள் நண்பர்களாக இருந்தாலும் இவர்களுக்கு என்று தனி தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
எந்த நடிகர், நடிகைகளாக இருந்தாலும் நடிக்க ஆரம்பித்த உடனே அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் உருவாகவில்லை. அதுபோலவே தளபதி விஜய் மற்றும் தல அஜித்திற்கு சில காலங்கள் போகப்போக இவர்களுக்கென்றே பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உருவானது.
காலப்போக்கில் பேனர்,கட் அவுட் என்று வைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் தற்பொழுது நடிகை ரம்யா பாண்டியனுக்கு மட்டும் மிகப்பெரிய கட்டவுட் அடுத்துள்ளார்கள் அவருடைய ரசிகர்கள்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளார்.இந்நிலையில் இவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் பேனர் அடித்து பால் மற்றும் பூக்களை வைத்து அபிஷேகம் செய்து வருகிறார்கள்.
அவ்வபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.