நடிப்புக்கு லீவு விட்ட ரம்யா பாண்டியன்.. எங்கு சென்றார் தெரியுமா.?

தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவருடைய கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மற்றும் இடுப்பழகு போன்றவற்றால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் மேலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏராளமான புகைப்படங்களை விட்டு வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய குடும்பத்துடன் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு கிளம்பி உள்ளதாக பதிவிட்டுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆண் தேவதை, டம்மி பட்டாசு உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்த பிரபலமடைந்த நடிகை ரம்யா பாண்டியன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமடைந்த இவர் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். மேலும் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து இவர் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோசர்களை வைத்துள்ளார்.

ramya pandiyan 5
ramya pandiyan 5

அந்த வகையில் அவ்வப்பொழுது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது தன்னுடைய குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதாவது நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி தான் அவருடைய சொந்த ஊர் மேலும் தன்னுடைய குடும்பத்துடன் குற்றாலம் செல்ல இருப்பதாகவும் சந்தோஷமான தருணமாக இருக்கும் எனவும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ramya pandiyan 34
ramya pandiyan 34

இவ்வாறு இவருடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சொந்த ஊருக்கு சென்றுள்ள இவர் குடும்பப் பெண் போல் புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மேலும் இவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் பலரும் அந்த புகைப்படத்தில் இருக்கிறார்கள்.

 

Leave a Comment