கவுண்டமணியுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன்.! பட வாய்ப்பே இல்லாமல் ஐந்து வருடங்களாக திணறிய சம்பவம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சிலர் அவர்கள் செய்யும் சில தவறுகளால் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடி வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா கிருஷ்ணன் செய்த சிறு தவறினால் கிட்டத்தட்ட 5 வருடங்கள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இவர் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பொதுவாக நடிகைகளுக்கு அவர்களின் இளமைப்பருவம் குறைந்தது அப்புறம் குணச்சித்திர நடிகராக மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த வகையில் ரம்யா கிருஷ்ணனும் தொடர்ந்து குணச்சித்திர நடிகையாக நடித்து சினிமாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கிறார். அந்த வகையில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் அறிமுகமான காலகட்டத்தில் பெரிதாக இவர் நடிப்பு சினிமாவில் பிரபலம் அடையவில்லை.

அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து கவுண்டமணியுடன் இணைந்து ராஜா எங்க ராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இத்திரைப்படம் இவருக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தியது.  அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு கிட்டத்தட்ட 5 வருடங்கள் திரைப்படங்களில் சுத்தமாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் நடிகர் ரஜினி உடன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் இவருக்கு சினிமா உலகில் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் புகழின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு தான் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

அந்தவகையில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.  அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாஸ்,தமன்னா, அனுஷ்கா உட்பட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வந்த பாகுபலி திரைப்படம் மீண்டும் இவருக்கு ஒரு நல்ல படமாக அமைந்தது.

Leave a Comment