பாண்டிச்சேரியில் இருந்து வந்த ரம்யா கிருஷ்ணன் காரை சோதனை செய்த போலீஸ்.! மதுபாட்டிலை கண்டு அதிர்ச்சி.!

90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன்.இவர் ஆரம்ப காலத்தில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் அடுத்தடுத்த படவாய்ப்புகளை பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அத்தகைய படங்கள் திரையரங்கில் வெளிவந்து சொல்லும் அளவிற்கு பிரபலம் அடைவில்லை  சினிமா கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்.

ரம்யா கிருஷ்ணன் இதனையடுத்து சினிமாவில் இருந்து சற்று விலகி இந்தநிலையில் சின்னத்திரை சீரியல் இவரை நடிக்க அழைத்தது இதனை ஏற்று அவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மேலும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமா உலகில் அவ்வப்போது வரும் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் ஆம்பள, தானா சேர்ந்த கூட்டம், பாகுபலி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது சினிமா உலகில் வலம் வருகிறார்.

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனை பற்றிய செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இவர் அண்மையில் பாண்டிச்சேரி சென்றுள்ளார் திரும்பி வரும்பொழுது காரில் பல மது பாட்டில்களை எடுத்து வந்ததால் போலீசாரிடம் சிக்கியுள்ளார் இச்செய்தி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டு காட்டிலுள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த இனோவா காரை மறித்து சோதனை செய்தனர் அந்த காரில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சகோதரி விநாயக் கிருஷ்ணன் இருந்தனர்.அவர்கள் சோதனை செய்ய அனுமதி கேட்டனர் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர் போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது அந்த காரில் 96 பீர் பாட்டில் மற்றும் 8 மதுபான பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அந்த கார் ஓட்டுநர் செல்வ குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர் காரை பறிமுதல் செய்தனர் அதன்பின் சிறிது நேரத்தில் தனது காரின் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணன் சொந்த ஜாமீனில் அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment