நடிப்பதையும் தாண்டி பல தொழில்களை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் ராம்சரண்.! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் சிரஞ்சீவி தற்பொழுது வரையிலும் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாகவும் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ராம்சரண் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகனாக தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ராம்சரண் தற்பொழுது தென் இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ராம்சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில் இவருடைய நடிப்பிற்கு பாராட்டு கிடைத்திருந்தது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து இவர் ஷங்கர் இயக்கத்தில் தனது 12வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்துக்கு முன்பு வரை ரூபாய் 35 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த ராம்சரண் தற்போது தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 100 கோடியாக உயர்த்திவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிரஞ்சீவியின் ஒரே மகனான ராம் சரணின் சொத்து மதிப்பு ரூபாய் 1300 கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் மட்டும் 25 ஆயிரம் சதுர அடி கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ராம் சரண் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு மட்டுமே ரூபாய் 40 கோடிக்கு மேல் இருப்பதாகவும் அதே போல் கோடிக்கணக்கில் மதிப்புள்ள கார்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர் 34 பிராண்டுகளின் விளம்பர தூதராக இருந்து வருகிறார் ஒரு விளம்பரத்திற்கு ரூபாய் 1.8 கோடி வரை சம்பளம் வருகிறாராம். இதனை அடுத்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் டுரூஜெட் என்கின்ற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment