20 வருடங்களுக்கு பிறகு தன்னுடன் நடித்த பிரபல நடிகரை சந்தித்த ரம்பா.! வைரலாகும் புகைப்படம்..

80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. இவருடைய நடிப்பு, நடன திறமை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது எனவே இவர் நடித்த காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தார். மேலும் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக சினிமாவில் நடிகைகள் என்றாலே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களுக்கு வயதாக தொடங்கியதும் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது.

அவ்வாறு கிடைத்தாலும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் தான் கிடைக்கும் இதன் காரணமாக ஒரு சில நடிகைகள் மட்டும் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பரவாயில்லை எனக்கூறி நடித்து வருவார்கள் ஆனால் இன்னும் சில நடிகைகள் கதாநாயகியாக மட்டும் தான் நடிக்க வேண்டும் அவ்வாறு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ரம்பா.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு தற்பொழுது மூன்று குழந்தைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ரம்பா திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனால் குடும்ப வேளையில் பிஸியாக இருந்து வருவதால் பெரிதாக இந்தியாவிற்கு வராமல் இருந்து வருகிறார். இந்நிலையில் ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் இந்தியா வந்துள்ளார் மேலும் அவர் தன்னுடைய நட்சத்திரங்களை சந்தித்து அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தல் குஷ்பூ,மீனா, சினேகா உள்ளிட்ட பலரையும் சந்தித்தார் ரேமா. இதனை தொடர்ந்து பிரபுதேவாவையும் சந்தித்துள்ளார். அதாவது ரம்பாவின் கணவர் நடத்திய பார்ட்டியில் பிரபுதேவா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபுதேவா ரம்பாவின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ramba 1

மேலும் ரம்பாவின் கணவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் ‘பிரபுதேவா அவர்கள் இந்த பாட்டில் கலந்து கொண்டதற்கு நன்றி என்றும் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அவரை பார்க்கிறோம்’என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த பார்ட்டியில் குஷ்பூ, மீனா, சங்கீத உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் நடிகை ரம்பா 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபுதேவாவுடன் இணைந்து விஜேபி, காதலா காதலா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

rambhaindran

Leave a Comment

Exit mobile version