பிரபல நடிகைக்கு காதல் பரிசாக வீட்டை எழுதி கொடுத்த இளம் நடிகர்..! இது வசதிக்கா..? இல்லை அசதிக்கா..?

rakul preet singh latest news: சிறு வயதிலிருந்தே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வருபவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தமிழ்மொழியை திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் பாரபட்சமின்றி இந்தி தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு நமது நடிகை தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஸ்பைடர் தீரன்அதிகாரம் ஒன்று, என்ஜிகே என பிரபலமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எளிதில் தமிழ் சினிமாவில் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு பிரபலமாக இருந்தாலே சர்ச்சையில் சிக்கிக் கொண்டு தான் தீர வேண்டும் அந்த வகையில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் ராகுல் பிரீத் சிங் சமீபத்தில் போதை பொருள் விவாகரத்திலும் மாட்டிக் கொண்டார்.

அந்த வகையில் இவர் மீது வழக்கு தொடுத்து விடுவார்கள் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பயந்து கொண்டிருந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் எளிதாக வெளியில் வந்துவிட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான இளம் நடிகர் ஒருவர் ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு வீடு வாங்கித் தந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன இதை பற்றி நமது நடிகை சமந்தாவின் நேர்காணல் நிகழ்ச்சியில் அதற்கான பதிலை தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால் யாராவது பரிசாக வீட்டை கொடுப்பார்களா என கேள்வி எழுப்பி உளளார். அதுமட்டுமல்லாமல் தன்னைப்பற்றிய சர்ச்சையான பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது இதனால் எனக்கு பெரும் மன உளைச்சலை உருவாக்கி விட்டது என கூறி உள்ளார்.

ஆனால் ஒரு தரப்பினர் இவர் தெலுங்கு நடிகருடன் காதல் வசப்பட்டு உள்ளார்.  இது உண்மை என்று தோளில் கிடக்கும் துண்டை போட்டு கூட சத்தியம் செய்து வருகிறார்கள்.

rakul preet singh
rakul preet singh

Leave a Comment