அயோத்தியா ராமர் கோவில் கட்ட கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்த ராக்கி பாய்.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

கே ஜி எஃப் யாஷ் அயோத்தியத்தில் ராமர் கோவில் கட்டுவதற்காக பணம் கொடுத்தது பற்றிய தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.கன்னட திரைவேலகில் ராக்ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவருடைய இயற்பெயர் நவீன் குமார் கவுடா என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு இவருடைய இயற்பெயர் நவீன் குமார் ஆனால் பலரால் யாஷ் என அழைக்கப்பட்டது தற்பொழுது வரையிலும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் யாஷ் என்று அழைத்து வருகிறார்கள். இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முதன் முதலில் நடித்த சீரியல் நந்த கோகுலா.

பிறகு இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு தான் இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் பல்வேறு திரைப்படங்கள் ஹீரோவாக நடித்த இவர் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் இந்திய அளவில் மிகவும் பிரம்மாண்ட வரவேற்பினை பெற்றிருந்தது.

இந்நிலையில் முதல் முதலில் யாஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது என்பதை குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.அந்த வகையில் 200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கே ஜி எஃப் 2 வெளியானது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார்.

மேலும் இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சஞ்சய்த்த, ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ராவ் ரேஷ் உள்ளிட்ட இன்னும் ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யாஷ் அவர்கள் 50 கோடி நன்கொடை அளித்துள்ளதாக சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் யாஷ் கோவிலுக்கு சென்ற பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment