பிக்பாஸ் வீட்டில் மாஸ் காட்டும் ராஜு ஜெயமோகன் – தனது மனைவியுடன் கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படம்.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டவர்கள் ராஜூ ஜெயமோகன். இவர் இதற்கு முன் விஜய் டிவி தொலைக்காட்சியிலே கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, பாரதிகண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். மேலும் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தார்.

இருந்தும் இவரால் பெருமளவில் மக்களிடையே பிரபலம் அடைய முடியவில்லை. அதனால்தான் தற்போது ராஜூ ஜெயமோகன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்வு செய்துளளார். இந்த நிகழ்ச்சியில் இவர் விளையாடும் வீதம் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மற்றும்  மக்கள்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவருக்கு பெருமளவு ரசிகர்கள் இருந்தனர். ஏனென்றால் இவர்  நேர்மையாகவும் மற்றும் பேசும் விதமும் சரியாக இருக்கும். ஆனால் தற்போது இவர் பிக்பாஸ் வீட்டில் மற்ற  போட்டியாளர்கள் இடையே ஏதேனும் சண்டை என்றால் அதில் இவர் ஈடுபடாமல் சற்று விலகியே இருப்பார். தேவையில்லாமல் வரும் வாக்குவாதங்களில் இருந்து இவர் சற்று தள்ளியே இருக்கின்றார்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒருசில போட்டியாளர்கள் ராஜூ ஜெயமோகன்யின் மீது கோபத்தில் இருக்கின்றனர். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் இடம் யாரிடமும் பகை வைத்துக்கொள்ளாமல் அறிவுரை பேசுவது போன்று அக்கறையாய் பேசி சேப் கேம் விளையாடுவது போன்று தோன்றுகிறது.

இவர் நீண்ட வருடமாக தாரா என்ற பெண்ணை காதலித்து ஒரு வருடங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

raju jeyamohan
raju jeyamohan

Leave a Comment