ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் வீட்டில் இறுதி நாட்கள்வரை இருந்ததற்காக வாங்கிய சம்பளம் 50 லட்சம் கிடையாது.? அதுக்கும் மேல..

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இறுதி நாளை நேற்று கோலாகலமாக முடித்து வைத்தார் உலகநாயகன் கமலஹாசன். பிக்பாஸ் ஐந்தாவது சீசன் சற்று வித்தியாசமானதாக இருந்தது சண்டை போட்டுக்கொண்டாலும் திடீரென அதை எல்லாம் மறந்துவிட்டு ஒன்றாக இருப்பது மற்றும் பெரிய அளவில் குரூப் இல்லாமல் தனித்தனியாக விளையாண்டு மக்களை மகிழ்வித்தனர்.

பிக்பாஸ் சீசன் 5- ல் மொத்தம் 21 ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் அனைவரும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தி இருந்தாலும் வாரம் வாரம் ஏலிமினேஷன் ரவுண்டு  வைக்கப்பட்டு அதில் மக்கள் மத்தியில் ஒரு இந்த வாக்குகளை பெற்று வெளியேறினார் இதனால் இறுதிகட்ட வாரங்களில் 5 பிரபலங்கள் மட்டுமே தக்க வைக்க பட்டனர்.

அதில் முதலாவதாக ராஜூ, பிரியங்கா, பவானி, அமீர், பிரியங்கா போன்ற பல போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விளையாட்டு அல்லது பாடலை பாடி ஒவ்வொருவராக வெளியே போய் விட்டனர் கடைசியாக ராஜு மற்றும் பிரியங்கா இருவரையும் கமல் அழைத்துச் சென்றார்.

அதிக ஓட்டுகளை வாங்கிய ராஜுவின் கையை தூக்கி வெற்றி பெற்றதாக அறிவித்தார் மேலும் பரிசு தொகையையும், கோப்பையையும் கொடுத்து அசத்தினார் கமல். ராஜு சந்தோஷத்தின் உச்சியில் இருந்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் வீட்டில் 16 வாரங்கள் இருந்த ராஜுவுக்கு வாரத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சம்பளம் என்ற கணக்கில் 16 வாரங்கள் மொத்தம்.

21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது அதன்படி பார்க்கையில் பரிசு தொகை 50 லட்சம் சம்பளம் லட்சத்தையும் சேர்த்து பார்த்தால் மொத்தம் 71 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளதாக தெரியவருகிறது. இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment