பல நாள் ரகசியத்தை போட்டு உடைத்த ராஜ்கிரண்.. அந்தப் பெண் என் மகளே இல்லை.!

இயக்குனரும், நடிகருமான ராஜ்கிரனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் தற்பொழுது ராஜ் கிரணின் மகள் ஜீனத் பிரியா சமீபத்தில் நாதஸ்வரம் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தையும் மீறி திருமணம் செய்து கொண்டார் இது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் ராஜ்கிரனின் வீட்டில் அவருடைய மனைவி தான் இன்னும் மகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவல் பரவி வரும் நிலையில் முதன்முறையாக நடிகர் ராஜ்கிரன் பல வருட ரகசியத்தை உடைத்து பெரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘என் மகளை ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணி இருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது, என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும் உண்மையை விளக்க வேண்டியது என் கடமை எனக்கு திப்புசுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத் தவிர வேறு பிள்ளைகள் கிடையாது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார் அவர் பெயர் பிரியா அவர் மன சந்தோஷப்படுவதற்காக அவரை வளர்ப்பு மகள் என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன் முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட சீரியல் நடிகர் என்னென்ன முறையிலோ அந்தப் பெண்ணை தன் வசப்படுத்தி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விஷயம் என் காதிற்கு வந்ததும் அந்த நடிகரைப் பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில் அவர் மகா மட்டமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈன குணமும் கொண்டவர் என்பது எனக்கு தெரிய வந்தது அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி சினிமாத்துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பது மட்டுமே அவரது குறிக்கோள்.

இதை எல்லாம் பலவிதமாக விசாரித்து தெரிந்து கொண்ட நான் என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன் அவர் காதில் நான் சொன்னது எதுவும் ஏறவில்லை அவரை தான் கட்டுவேன் என்றும் உங்கள் பெண் என்று நானும் அவரும் வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டோம் என்றும் அந்தப் பெண் சொல்லி இருந்தார். அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்த கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி அந்த பெண்ணிடம் அழுது மன்றாடியும் எப்படி எல்லாம் மடி பிச்சை கேட்டு ஒரு வழியாக சரி இவர் வேண்டாம் உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளையை பாருங்கள் என்று சொல்ல நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

இந்த சூழ்நிலையில் தான் என் மனைவியின் தோழியான லக்ஷ்மி பார்வதியை பார்த்துவிட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு அந்த பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன இன்னும் எங்கள் வீட்டிற்கு திரும்பவில்லை இந்த நிலையில் நான் இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது நான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல் பொய் பொய்யாக பேசிக்கொண்டு திரிகிறது இந்தப் பெண்.

sun tv0 actor
sun tv0 actor

இந்த விஷயத்தில் நான் கோபப்பட்ட போது கூட என்னை சமாதானப்படுத்தி அந்த பெண்ணுக்காக பரிந்து பேசி உறுதுணையாக நிற்பது என் மனைவி மட்டும் தான் பெண் பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளையை நல்லபடியாக வாழ வைக்க வேண்டுமே என்ற அக்கரையில் எப்படி எல்லாம் கண்காணிப்பார்களோ அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது வாழ்க்கை அனுபவம் இல்லாத சிறுபிள்ளைக்கு தவறாக தோன்றியிருக்கிறது என் வளர்ப்பு பின் ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து இருந்தால், சாதி பேதம் பார்க்காத நான் சந்தோஷமாக கட்டிக் கொடுத்திருப்பேன்.

ஆனால் தரம் கெட்ட பணத்திற்காக எதையும் செய்ய துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்தது தன் வாழ்க்கையை நாசமாகி கொண்டாலே என்பது மட்டுமே என் வருத்தம் இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் என் பெயரை பயன்படுத்தி அவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால் அதனால் ஏற்படும் எந்தப் பிரச்சனைக்கும் நான் பொறுப்பல்ல என்பதுதான் இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த சீரியல் நடிகர் தன் குள்ளநரி தனத்தால் என் வளர்ப்பு பெண்ணிற்கு கணவனாககிக் கொள்ளக்கூடும். ஆனால் எந்த காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது இன்றிலிருந்து இவர்கள் இருவரும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை நேர்மையும் சத்தியமுமே என்றும் வெல்லும் என கூறியுள்ளார் ராஜ்கிரண்.

Leave a Comment