ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளிவந்த ரஜினி புகைப்படம்..! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அண்மை காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் தொடங்கப்பட்டது தற்பொழுது விறுவிறுப்பாக சென்னையில் போய்க் கொண்டிருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் சீன்கள் நிறைய இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி  மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் சூட்டிங் இரவு பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

மேலும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது . அதாவது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினியின் தீவிர ரசிகையான சின்ன பொண்ணு ஒன்று அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு உள்ளது அப்பொழுது நேரத்தை பார்க்காமல் அந்த ரசிகைக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார்.

மேலும் ரஜினி உடன் நின்று அந்த குழந்தை புகைப்படம் எடுத்துக் கொண்டார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  சூப்பர் ஸ்டார் என்கின்ற அந்தஸ்தை பார்க்காமல் ஒரு ரசிகைக்காக நேரத்தை ஒதுக்கி விட்டு வந்து அவருக்கு ஆட்டோகிராப் புகைப்படம் போட்டுக் கொடுப்பது பெரிய விஷயம் சூப்பர் எனக்கூறி லைக்குகளையும் கமெண்ட்களையும் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

rajini
rajini

Leave a Comment