“காதலர் தினத்தை” முன்னிட்டு புதிய முடிவை எடுத்துள்ள ரஜினி மகள் ஐஸ்வர்யா.! என்ன பண்ண போறார் தெரியுமா.?

நடிகர் தனுஷ் சினிமாவை நன்கு புரிந்து வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் அதற்கு ஏற்றார் போல நடித்து தற்பொழுது உச்ச நட்சத்திரமாக மாறி உள்ளார். இப்பொழுது கூட இவரது கையில் 6,7 திரைப்படங்கள் இருக்கின்றன அதில் நடித்துக் கொண்டுதான் வலம் வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழை தாண்டி மற்ற மொழிகளான ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் ஆகிய மொழி படங்களிலும் தற்போது நடித்து அசத்தி வருகிறார் இப்படி சினிமாவை எப்படி நன்கு உணர்ந்து புரிந்து கொண்டு சிறப்பாக பயணிக்கிறார் அதேபோல தனது குடும்பத்தையும்  நன்றாக பார்த்துக் கொண்டார்.

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இப்பொழுது இரு மகன்கள் இருக்கின்றனர் 18 வருடங்களாக திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த செய்தி தற்போது பூதாகரமாக வெடித்தது தீயாய் பரவி வருகிறது.

இந்த பிரச்சனை இப்பொழுது எந்த நிலைமையில் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு புரியவேயில்லை.. வெவ்வேறு மாதிரியான செய்திகள் மற்றும் உலா வந்த வண்ணமே இருக்கின்றன.  இந்த நிலையில்  இருவரும் விவாகரத்து பெற்று பிறிய போவதாக சொல்லிவிட்டு ஒரே ஹோட்டலில் தங்கி உள்ளனர் காரணம் என்னவென்று கேட்டால் இருவரும் தனது தனிப்பட்ட வேலைக்காக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆம் நடிகர் தனுஷ் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் அதில் நடிக்க வந்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா காதலர் தினத்தை முன்னிட்டு “காதல் பாடல்” ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் அதற்கான வேலைகள் தான் அவர் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. எது எப்படியோ ஒரே ஹோட்டலில் இருக்கிறீர்கள் அப்படியே ஒன்று சேர்ந்து வாருங்கள் வந்து வாழுங்கள் என ரசிகர்களை கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Leave a Comment