ரஜினியால் தள்ளி போகும் விக்ரம் 2 படபிடிப்பு.! இதற்கு கமல் ஒத்துப்பாரா தலைவரே.?

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக படபிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தை எப்படியாவது வெற்றி திரைப்படமாக கொடுக்க வேண்டும் என்று மிகவும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்.

அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் பிற மாநிலங்களின் சூப்பர் ஸ்டார்களை களம் இறக்கி இருக்கிறார் இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினியால் தற்போது விக்ரம் 2 மற்றும் கைது 2 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு தள்ளிப் போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது நடிகர் ரஜினிகாந்தின் கடைசி திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 வது திரைப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனராஜா தானாகவே முன்வந்து அழைத்துப் பேசி இருக்கிறார்.

இதனால் தலைவர் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயின் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் முடிந்தவுடன் அடுத்ததாக கைதி 2 மற்றும் விக்ரம் 2 இந்த இரண்டு படத்தில் ஏதேனும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கு இடையில் தலைவர் 171 வது படத்தை இயக்க இருப்பதால் தற்போது விக்ரம் படத்தின் இரண்டாவது பாகத்தின் படபிடிப்பு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலிடம் பேசி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் தலைவர் 171 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு நடிகர் கமல் அவர்கள் ஒத்துப்பாரா என்று தெரியவில்லை என கூறப்படுகிறது.

Leave a Comment