தனக்கென மக்கள் மற்றும் ரசிகர்களை வைத்திருந்த பிரபல நடிகருக்கு ரஜினியின் “அண்ணாத்த” படமே கடைசி படம் – சோகத்தில் ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை குறிவைத்து வெளியாக இருக்கிறது.  இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

மேலும் இதில் ரஜினியின் காமெடி, ஆக்ஷன் ஆகியவற்றைப் பார்க்க முடியும் என கூறப்படுகிறது. ரஜினிக்கு உறுதுணையாக இத்திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, யோகி பாபு, சூரி போன்ற பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இதுவே இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

படத்தை வெளியிடுவதற்கு முன்பாகவே மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க அடுத்தடுத்து அண்ணாத்த படத்திலிருந்து போஸ்டர், பாடல் வெளிவந்த நிலையில் தற்போது டிரைலரும் படத்தின் டீசர் வெளியாக ரெடியாக இருக்கிறது படக்குழு. இந்த படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி மக்களை கவர்ந்துள்ளார்.

ஆட்டம் போட வைத்து உள்ளது இதில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து உள்ளதால் நிச்சயமாக படம் ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது அதற்கு முக்கிய காரணம் எஸ்பிபி பாடியிருப்பது தான் என பலரும் கூறி வருகின்றனர் அதேபோல் இந்த படமே அவருக்கு கடைசி படமாக அமைந்து உள்ளதாம்.

பின்னணி பாடகர் எஸ் பி பி ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பிறகு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதுவே அவருக்கு கடைசி படமாக உள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Leave a Comment