“இரவின் நிழல்” படத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போன ரஜினிகாந்த் – என்ன சொன்னார் தெரியுமா.? வைரல் புகைப்படம்.

தமிழ் சினிமா உலகில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தொடர்ந்து நல்ல கதை அம்சம் வரும் படங்களில் நடிகராகவும் மற்றும் பல சிறந்த படங்களை இயக்கியும் வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கிய பல படங்கள் விருதுகளையும் குவித்தது.  மேலும் இயக்குனர் பார்த்திபன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மற்ற இயக்குனர்களுடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமாக தான் இருக்கும்.

அவரது படங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக காணப்படும். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த இரவின் நிழல் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பார்த்திபன் தமிழ் திரையுலகில் உலகில் முதல் முதலில் சிங்கிள் ஷார்ட் நான்லினியர் படமாக எடுத்துள்ளார்.

இரவின் நிழல் படம் வெளிவந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை அள்ளி வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் ரஜினிகாந்த் எந்த நடிகருடைய திரைப்படம் அவருக்கு பிடித்து போய் இருந்தாலும் அந்தப் பட குழுவிற்கு போனிலோ அல்லது நேரிலோ வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பார்த்திபனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது, இரவின் நிழல் திரைப்படத்தை ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பன்..

பார்த்திபன் அவர்களுக்கும் மற்றும் படக்குழுவில் உள்ள ஏ ஆர் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் போன்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்று கூறியுள்ளார். மேலும் ரஜினி பார்த்திபனை சந்தித்து அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

rajini and parthipan
rajini and parthipan

Leave a Comment