ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜூஸ் கொடுத்து முடித்து வைத்தது என் மகள்தான்..! பெருமையுடன் கூறிய பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் தற்போது ஹீரோவாக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற காவிரி பிரச்சனையின் பொழுது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ரஜினியின் பக்கத்தில் இருக்கும் ஒரு குழந்தை யார் என்று தெரியுமா.

அவர் பிரபல நடிகை ரேகாவின் மகள் தான் அப்பொழுது ஏற்பட்ட அந்த தருணத்தை தற்சமயம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அதனை ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அந்த வகையில் காவிரி பிரச்சினையின் போது ஒன்பது மணி நேரம் உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்தது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்த உண்ணாவிரதம் முடிந்த நிலையில் ரேகாவின் மகள் கொடுத்த ஜூஸ் தான் ரஜினிகாந்த் பருகினார்.

இதனால் அதற்காகவே தான்  இவள் ஆசிர்வதிக்க பட்டால் எனவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனவும் நடிகை ரேகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நடிகை ரேகா வேறு யாரும் கிடையாது கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

rekha daughter
rekha daughter

அதன்பிறகு காவலன் அவன் கோவலன் மற்றும் புன்னகை மன்னன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் அதன் பிறகு அம்மா அக்கா போன்ற துணை கதாபாத்திரத்திலும்  நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறனை வெளிக்காட்டி உள்ளார் மேலும் நமது நடிகைக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அவருடைய பெயர் இவரும் சினிமாவில் தற்போது நடிக்கப்போவதாக செய்திகள் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

rekha
rekha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment