ரஜினிக்கே பாடம் எடுத்தவன் நான்.. நீ எல்லாம் எம்மாத்திரம் முன்னணி நடிகரை அசிங்கப்படுத்திய வடிவேலு.!

90 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்தி கொண்டவர் நடிகர் வடிவேலு. முதலில் காமெடியனாக என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார்.

காமெடியனாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு சமயத்தில் ஹீரோவாக தொடர்ந்து கதைகள் கிடைத்ததால் அதிலும் ஆர்வம் காட்டினார் அந்த வகையில் நடிகர் வடிவேலு 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தெனாலி போன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்றவர் இப்படி ஓடிக் கொண்டிருந்த நிலையில் தான் 23ஆம் புலிகேசி இரண்டாவது பாகம் உருவாகும் பொழுது சங்கருக்கும் வடிவேலுக்கும் பிரச்சினை ஏற்பட தயாரிப்பாளர் சங்கம் இனி வடிவேல் படங்களில் நடிக்க கூடாது என உத்தரவிட்டது.

நான்கு வருடம் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு அந்த பிரச்சினைகளில் இருந்து தற்போது வெளிவந்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலு பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பூதாகரமாக வெடித்து உள்ளது அதாவது படிக்காதவன் படத்தில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலு தானாம்.

கடைசி நேரத்தில் அவர் இந்த படத்தில் இருந்து கழட்டி விடப்பட்டார் இது குறித்து தகவல் தற்போது கிடைத்துள்ளது. மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவிலே ஏன் படிக்காதவன் படத்தில் இருந்து விலகினார் என்பது குறித்து சொல்லி உள்ளார். முதலில் வடிவேலு படிக்காதவன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சீனைக்கு நடிகர் ஏழு எட்டுக்குகள் எடுத்தாராம்.

அந்த சீன் சரியாக வராததால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த காட்சி எடுக்கப்பட்டது அப்பொழுதும் அதிக டேக்குகள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் படத்தின் ஹீரோ நடிகர் தனுஷ் அவரிடம் வந்து இயக்குனர் சொல்லுவது போல செய்யுங்கள் என கூறியுள்ளார் உடனே கோபப்பட்ட வடிவேலு தனுஷை பார்த்து முறைதார்.  பின் ஷூட்டிங் பேக்கப் ஆன பிறகு ஒரு அறைக்கு சென்று வடிவேலு சந்திரமுகி படத்தில் தனுஷ் மாமனாருக்கு நான் தான் சொல்லிக் கொடுத்தேன்.. அப்படி இருக்க தனுஷ் வந்து என்ன பார்த்து இப்படி நடிங்க அப்படி நடிங்க டைரக்டர் சொல்றத கேளுங்க இவர் எல்லாம் சொல்றாரு என கோபப்பட்டு பேசியதாக மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

Leave a Comment