ரஜினி NO .1 ஹீரோவாக இருக்க.. இது தான் காரணம் – 20 வருடம் கழித்து உண்மையை உடைக்கும் எஸ் ரவிக்குமார்.!

தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்த இப்பவும் சினிமா உலகில் பயணித்துக் கொண்டிருப்பவர் கேஎஸ் ரவிக்குமார். முதலில் இயக்குனராக அவதாரம் எடுத்து பின் நடிக்கவும் செய்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த கூகுள் குட்டப்பா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து ரஜினியின் ஜெய்லர் படத்திலும் பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார் ரஜினியும் கேஎஸ் ரவிக்குமாரும் முதன் முறையில் முத்து என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்தனர்.

அதன்பிறகு படையப்பா படத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது படையப்பா படத்தை ரஜினி நடித்தும், தயாரிக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படையப்பா படம் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்கும் என நான் நம்பவில்லை ரஜினிக்கு நிகராக இந்த படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டியிருப்பார்.

அதேசமயம் சிவாஜி அவர்களும் மிக அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார் இந்த படம் வெளியாகி 20 வருடம் ஆகிவிட்டது என கூறினார். ரஜினி குறித்து அவர் சொன்னது படையப்பா படத்தின் பட்ஜெட் 5 கோடி என கூறினேன் ரஜினி காசை கொடுத்து படத்தை எடுக்க சொன்னார் ஆனால் அதற்கு கம்மியான காசியிலேயே படத்தை எடுத்து விட்டோம்.

மீதி காசை ரஜினியிடம் ஒப்படைக்க போனேன். ரஜினியோ மீதி பணத்தை படையப்பா படத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கொடுத்துவிடுங்கள் என கூறினார். ரஜினிக்கு இருக்கும் மனசு வேறு யாருக்கும் இல்லை என கூறினார். அதனால்தான் தற்போது அவர் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார் என தெரிவித்தார். படையப்பா படம் வெளியாகி சுமார் 45 கோடி வசூல் வேட்டை நடத்தியது.

Leave a Comment