திடீரென முதல்வர் ஆபீஸ்க்கு வந்த ரஜினி.! நிதி உதவி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா.? வைரல் நியூஸ்.

கொரோனா என்ற தொற்று வியாதி முதல்கட்ட அலை ஓய்ந்த நிலையில் தற்போது அதைவிட பல மடங்கு அதிகரித்த இரண்டாம் கட்ட தொற்று வியாதி மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு பக்கம் தொற்று மக்களை கொன்று குவிக்க மறுபக்கம் பொருள்கள் கூட வெளியே வாங்க முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரம் எடுத்துள்ளதால் அதை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள். ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மேலும் அனைத்து தொழில்களையும் முடங்கியதால் தற்பொழுது மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிதிக்கு உங்களால் முடிந்ததை கொடுங்கள் என சமீபத்தில் கேட்டுக்கொண்டார். முதல்வர் சொன்னதற்கு இணங்க உடனடியாக தொழிலதிபர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் அஜீத் 25 லட்சம்கொரோனா நிதிகாகவும், பெப்ஸி தொழிலாளர் சங்கத்திற்கு பத்து லட்சமும் கொடுத்தார் இவரைத் தொடர்ந்து சூர்யா, கார்த்தி குடும்பம் ஒரு கோடி, ரஜினி மகள் ஒரு கோடி கொடுத்தனர் அதன் பிறகு தன்னால் இந்த காசோலைகளை பல பிரபலங்கள் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து முதல்வரின் நிதிக்கு ரூபாய் 50 லட்சமும் கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment