“அண்ணாத்த” படம் வெற்றியா.. தோல்வியா.. பேட்டியில் பதிலளித்த நடிகை குஷ்பு.!

தமிழ் சினிமாவில் எப்போதும் நடிகர் ரஜினிக்கு நல்ல மவுசு இருப்பதால் அவர் இன்றும் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். மேலும் இவரது திரைப்படங்கள் இதுவரை நல்லதொரு விமர்சனத்தையும் வசூலையும்  பெற்றுள்ளன அதுபோலவேதான்  இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த திரையரங்கில் வெளியாகி அசத்தி வருகிறது.

அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி அன்று மிகப்பெரிய அளவில் உலக அளவில் வெளியானது முதல் இரண்டு நாட்களிலேயே வேற லெவலில் வசூலை அள்ளி இருந்தாலும் அடுத்தடுத்து மழை குறுக்கிட்டதால் படத்தின் வசூல் சற்று குறைந்தது. குடும்பங்கள் இந்த படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றர் மறுபக்கம் ரசிகர்களை  அண்ணாத்த திரைப்படம் பெருமளவு கவர வில்லை.

ஏனென்றால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அண்ணன் – தங்கை சென்டிமென்ட் படமாக அமைந்தது தான் காரணம் என கூறப்படுகிறது. இது போல பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து உள்ளதால் அதன் சாயல் இதில் கொஞ்சம் இருந்ததாக கூறி வந்தனர். எது எப்படியோ அண்ணாத்த திரைப்படம் 150 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.

இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மீனா, நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், அபிமன்யு சிங், ஜெகபதி பாபு போன்ற பல டாப் பிரபலங்கள் நடித்து இருந்தனர். இப்பவும் கூட அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குஷ்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்பொழுது அவர் நடித்த அண்ணாத்த படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அண்ணாத்த திரைப்படம் சீரியல் போல் உள்ளது என நிறைய மீம்ஸ்கள் உலாவருகின்றன உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர் அதற்கு பதில் அளித்த குஷ்பு நான் மீம்ஸ் பார்ப்பதில்லை அப்படி வந்தாலும் அவர்களுக்கு  ரிசல்ட் உள்ளது இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படம் அண்ணாத்த என கூறினார்.

Leave a Comment