ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு பல கண்டிஷங்களை போட்ட ரஜினி.! என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நெல்சன்..

வயதானாலும் கூட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருடன் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதுவதாக தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இது குறித்து பட குழுவினர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. ரஜினி நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் தன்னுடைய உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆறு மாதங்களுக்கு மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் அதன் பிறகு தான் சமீப காலங்களாக தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வேலையை பார்த்து வருகிறார். மேலும் பட சூட்டிங், விழாக்கள் போன்றவற்றில் அவருடைய மகள்களில் யாராவது ஒருவர் அவர் கூடவே இருக்கின்றனர் மேலும் இவர் அதிகமாக கூட்டம் கூடும் இடங்கள் பொது விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் சூட்டிங் பொழுது அவருடைய மகள்கள் அதிக கண்டிஷன் போட்டதாக கூறப்பட்டு வந்தது இப்பொழுது ஜெயிலர் படத்தில் அந்த தகவல் உறுதியாகி உள்ளது அதாவது பட சூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு முன்பே ரஜினி பல கண்டிஷன்களை போட்ட பிறகு தான் அந்த இடத்திற்கு வருகிறாராம் அதில் காலை 9 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விட்டு மாலை 6 மணிக்கெல்லாம் கிளம்பி விடுகிறாராம்.

மேலும் இவர் இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டாராம் ரொம்பவும் தன்னுடைய உடலை வருத்தியை நடித்த நடிக்காமல் இருந்து வருகிறாராம் மருத்துவர்களும் எந்த ஒரு ரிஸ்க்கும் எடுத்து நடிக்க கூடாது என ரஜினிக்கு கண்டிஷன் போட்டு உள்ளார்களாம். இவ்வாறு ரஜினி நார்மலாக மட்டும் தான் நடிக்க முடியும் இவ்வாறு இந்த கண்டிஷன்களோடு தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வருடம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment