என்னோட அப்பாவுக்கு கூட நான் அப்படி பண்ணல ஆனா சிவாஜி சாரின் கடைசி ஆசையை நிறைவேற்றினேன்.! வெளிப்படையாக கூறிய ரஜினி..

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னை தவறாக நினைத்துக் கொண்டிருப்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு காலகட்டத்தில் நடிப்பில் சிவாஜி கணேசனை அடித்துக்க ஆளே இல்லாமல் இருந்தது தற்பொழுது வரையிலும் கூட ஏராளமான ரசிகர்களின் ஃபேவரிட் நடிகராக இருந்து வருகிறார்.

இவர் மறைந்தாலும் இவருடைய நடிப்பு இன்றளவிலும் பேசும் பொருளாக இருந்த வருகிறது. மேலும் ஏராளமான நடிகர்கள் சிவாஜி கணேசனை பற்றி பாராட்டி இருக்கும் நிலையில் ரஜினியும் ஒரு நிகழ்ச்சியில் எதையும் முகத்துக்கு நேராக பேசும் அவரின் பண்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என கூறியிருந்தார். சிவாஜி கணேசன் அவருடைய சிவாஜி புரொடக்ஷன் சார்பில் தயாராகப்பட்ட சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான நிலையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையை படைத்தது வசூல் ரீதியாக நல்ல வசூல் வேட்டையை நடத்தியதோடு மட்டுமல்லாமல் 800 நாட்கள் ஓடியது அப்படி இந்த படத்தின் 200வது நாள் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் சிவாஜி கணேசன் குறித்து ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதாவது படையப்பா படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர். வேலையை இல்லைனாலும் நான் ஷூட்டிங் ஸ்பாட்ல இருப்பேன் சிவாஜி அப்பா வரத்துக்கு முன்னாடி நாங்க எல்லாரும் அங்க இருப்போம் அவர் யாருகிட்டயும் அவ்வளவு சீக்கிரமாக பேசமாட்டார் ஆனால் என்னை கூப்பிட்டு அவர் பேசுவார் 20 நாட்கள் மைசூரில் ஷூட்டிங் நடந்துச்சு அதுல பத்து நாட்கள் என்னை கூப்பிட்டு வச்சு அரசியல், குடும்பம், சமூகம் பற்றி பேசினார்.

என்னிடம் சில விஷயங்களை யாரிடமும் சொல்லக்கூடாது என சொன்னார் ஒருமுறை என்னிடம் நான் செத்துப் போயிட்டானா என் உடலுடன் வருவியாடா என சிவாஜி அப்பா கேட்டார் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என கேட்டேன் வயசு ஆயிட்டே போகுதுல நீ ஊரிலேயே இருக்க மாட்ட அதனால கேட்டேன் என சொன்னார். நான் கண்டிப்பா வருவேன் என சொல்லி கடைசி வரை அவர் உடல் தகனம் நடக்கும் வரை இருந்தேன் எங்க அப்பாவுக்கு கூட அப்படி பண்ணது இல்ல அதேபோல் சிவாஜி அப்பா என்னை பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

நல்லா மார்க்கெட் இருக்குற நேரத்துல வருஷத்துக்கு ஒரு படம், ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கிறான் ஊர் ஊரா சுத்துறானே நினைச்சேன் உனக்கு சொல்றவங்க யாரும் இல்லையா என நினைச்சேன்டா எல்லார்கிட்டயும் சொன்னேன் அப்புறம் தான் நான் உணர்ந்தேன் உனக்கு வேலை செய்ய மட்டும் தான் தெரியும் வேலை இல்லைனா என்ன பண்ணனும்னு தெரியாது ஆனால் நீ வேலை செய்யாமல் இருக்கிறது எப்படின்னு தெரிஞ்சு வச்சிருக்க அதனால யார் என்ன சொன்னாலும் நீ செய்ததுதான் கரெக்ட் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment