ஜெய்லர் பட காட்சியை பார்த்து மெய்சிலிர்ந்து போய் நெல்சனை பாராட்டிய ரஜினி.!

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இன்று வரையிலும் இவருடைய பட்டமான சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தொட கூட முடியாமல் திணறி வருகிறார்கள் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள்.

அந்த அளவிற்கு சினிமாவில் உயர்ந்த ஒரு இடத்தில் இருக்கும் நடிகர் ரஜினி கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிக்கும் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் எப்படியாவது ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று அதீத ஆசையினால் நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் என்ற கலவையான திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களிடம் செம்மை மொக்கை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அவருடைய கதையை மட்டும் நம்பி தற்போது களத்தில் இறங்கி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் ஒரு 20 நிமிட காட்சியை பார்த்து மெய்சிலிர்ந்து போய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு 20 நிமிடம் ஃபிளாஷ்பேக் காட்சியை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ரஜினியிடம் போட்டுக் காட்டி இருக்கிறார் இதை பார்த்த உடனே பிரமித்த ரஜினிகாந்த் நெல்சன் திலிக்குமாரை பாராட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த பிளாஷ்பேக் காட்சிதான் ஜெயிலர் படத்திற்கு முக்கியத்துவமான ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment