குடியால் வாழ்க்கையை சீரழித்து கொண்ட நடிகை.! பேட்டி கொடுத்த சேனலிலேயே வேலைக்கு சேர்ந்த அவலம்.! அதுவும் ரஜினி பட நடிகைக்கா இந்த நிலைமை…

தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக வலம் வந்த லட்சுமி அவர்களின் மகள் தான் ஐஸ்வர்யா இவர் 1990 ஆம் ஆண்டு நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  முதன்முதலாக கால் தடம் பதித்தார். அதன் பிறகு  ஐஸ்வர்யா தையல்காரன், மரிக்கொழுந்து, நான் புடிச்ச மாப்பிள்ளை, ராசுகுட்டி, எஜமான் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவர் தமிழை தாண்டி மலையாளம் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். ஒரு காலகட்டத்தில் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் சினிமாவின் மூலம் சம்பாதித்த பணத்தை அனைத்தையும் குடித்து குடித்தே அழித்தார் எனக்கூறப்படுகிறது. சமீப காலமாக அடிக்கடி youtube தளங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார்.

அந்தப் பேட்டியில் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்த பிறகு தன்னுடைய வீட்டில் நான்கு பூனைகள் மட்டுமே இருப்பதாக கூறினார். அதுமட்டும் இல்லாமல் குளிக்கும் சோப்புகளை நானே தயாரித்து வீடு வீடாக சென்று விற்று சம்பாதித்து வருவதாகவும் இப்பொழுது ஒரு பட வாய்ப்பு கூட இல்லாமல் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

பேட்டி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா பேட்டி கொடுத்த அதே சேனலில் தற்பொழுது வேலைக்கு சேர்ந்து உள்ளாராம் மாதம் 40,000 ரூபாய்க்கு தொகுப்பாளராக அந்த யூடியூப் சேனலில் பணிபுரிந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை பேட்டி எடுத்து அசத்தி இருந்தார்.

Leave a Comment