அண்ணாத்த திரைப்படத்தின் கதை இவ்வளவுதான்.! இதைத்தான் ஒருவருடமாக எடுக்கிறாரா சிவா

ஒரு வருடத்திற்கும் மேலாக ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் தற்பொழுது வரையும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று தான் வருகிறது.

இத்திரைப்படம் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்கள்.ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது என்பதற்காக மிகவும் அண்ணாத்த  திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் இருந்த 15 பேருக்கு கோரோனா தோற்று உறுதியானதால் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத காலமாக தான் மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் விரைவில் இத்திரைப்படத்தின் படபிடிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்களாம். அந்தவகையில் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன்  ஹைதராபாத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு முறை பெண்களாக குஷ்பு மற்றும் மீனா நடித்து வருகிறார். இவர்களைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார்கள்.  பிறகு காமெடி நடிகர்களான சூரி, சதீஷ், ஜகபதி பாபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் மொத்த கதையையுக் ஒரே வரியில் கூறியுள்ளார்கள்.  அதாவது, ஒரு பாரம்பரிய பெரிய குடும்பத்தில் இருக்கும் பெண் விருப்பப்பட்ட காதலனுடன் ஓடி விடுவதால் ஏற்படும் பஞ்சாயத்தும், சிக்களும்  தான் அண்ணாத்த திரைப்படத்தின் மொத்த கதை.

இந்நிலையில்  அண்ணாத்த 2011ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று கூறிவுள்ளார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment