ரஜினி கமல் அஜித் ஆகிய மூவரும் இந்த முன்னணி நடிகையுடன் நடித்ததே கிடையாதாம்.! யார் அந்த நடிகை தெரியுமா.?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் ரஜினி, கமல், அஜித். இவர்களுடன் இணைந்து நடிக்க பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஒவ்வொரு நடிகையையும் ஆசைப்படுவார்கள்.  இந்த நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கும் இவர் மட்டும் இன்னும் ரஜினி கமல், அஜித் ஆகியோருடன் இணைந்து நடிக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள். அது வேறு யாரும் கிடையாது நடிகை சமந்தா தான் சமந்தா இன்னும் இவர்களுடன் இணைந்து நடிக்காமல் இருக்கிறார். சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், விஜய், சூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்து விட்டார் ஆனால் ரஜினி, கமல், அஜீத் படத்தில் மட்டும் இன்னும் நடிக்காமல் இருந்து வருகிறார். அதேபோல் விஜய்யுடன் கத்தி, தெறி மெர்சல் என மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்காக அதிர்ச்சியை கொடுத்தார்கள். விவாகரத்திற்கு பிறகு சமந்தா படங்களில் நடிப்பதில்  மிகவும் பிஸியாக இருக்கிறார். கடைசியாக சமந்தா ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு  நடனம் ஆடியிருந்தார்.

இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

samantha 2
samantha 2

Leave a Comment