ஜெயிலர் ஷூட்டிங் முடித்த ரஜினி.! உண்மையை உடைத்த நெல்சன் திலிப் குமார்…

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினி அவர்கள் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. இதனை  தொடர்ந்து அதன் பிறகு இந்த திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த தமிழ் புத்தாண்டு முன்னிட்டு ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் திரைப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் விரைவில் ஜெயிலர் திரைப்படம் குறித்து அப்டேடுகள் வெளியாகும் என உறுதி அளித்திருக்கிறார் இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மேலும் ஒரு சில தகவல்களை கூறி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். அதாவது சமீபத்தில் நடைபெற்ற பிரபல விருது விழாவில் கலந்துகொண்ட நெல்சன் திலிப் குமார் ஜெயிலர் திரைப்படம் குறித்த ஒரு சில தகவல்களை கூறியிருக்கிறார் அதாவது நடிகர் ரஜினி அவர்கள் தன்னுடைய படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டார் என்று நெல்சன் திலிப் குமார் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் உறுதியளித்திருக்கிறார் இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மற்றும் வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளர்கள் நடித்து  வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக நடிகர் ரஜினியின் திரைப்படங்கள் எதுவும் சரியாக திரையில் ஓடாத நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment