சமீப காலமாக ரஜினி – விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது அது வேற ஒன்றும் அல்ல ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை சொல்ல உடனே விஜய் லியோ படத்தின் வெற்றி விழாவில் ஒரு குட்டி கதை சொன்னார்.
அந்த கதையில் வேட்டைக்குப் போகும் இருவர் காக்கா கழுகு முயல் மான் ஆகியவற்றை குறி வைக்கின்றனர் இதில் யானைக்கு குறி வைக்கின்ற நபர் மாஸானவர் ஏனெனில் பெரியதாக பார்த்து குறி வைத்தால்தான் அவர் மாஸ் அது மாதிரி பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படனும் என குறிப்பிட்டார்.
ரஜினி சொன்ன கதைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் கூறியதாக ரசிகர்களிடையே பெரிய மோதல் ஏற்பட்டது 2024 முதல் இன்று இந்த பிரச்சனையை மீண்டும் தலைதாக்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி ரசிகர்கள் ஒரு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரஜினியின் வீட்டிற்கு சென்று கோஷம் விட்டனர் இதனை எடுத்து ரஜினியை வெளியே வந்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனால் ரசிகர்கள் ரொம்ப உற்சாகமடைந்தனர் அப்பொழுது பேசிய ரஜினி ரசிகர்கள் காக்கா கழுகு பிரச்சனை எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க ஒரு காக்கா இல்லை எத்தனை காக்கா வந்தாலும் பார்த்துகிறோம் எவனாய் இருந்தாலும் வாங்க பார்த்துக்கலாம் முடிஞ்சா மோதிக்கலாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வாங்க..
கையில் துப்பாக்கி தெறிக்க வெளியானது தளபதி 68 செகண்ட் லுக் போஸ்டர்..
நாங்க பார்த்துக் கொள்கிறோம் குறி வச்சாச்சு காக்காவுக்கு இறகு எல்லாத்தையும் கட் பண்ணி விடுவோம் பாத்துக்கங்க என பகிரங்கமாக விஜய் ரசிகர்களை எச்சரித்துள்ளனர். இதனால் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ரஜினி – விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.