“அண்ணாத்த” பட பிடிப்பை முடித்த ரஜினி.? சூப்பர் ஸ்டாரை வைத்து அடுத்த படத்தை இயக்க ரெடியாக காத்து கிடக்கும் இளம் இயக்குனர்.! என்னது இவரா.?

திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணிக்கும் ரஜினி தற்பொழுதும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பது வழக்கம் அந்த வகையில் ரஜினி படத்தை தொடங்குவதற்கு முன்பாகவே படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து விடுவார்.

அந்த வகையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு எந்த படத்தில் இணைவார் என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் அடுத்தாக அவர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதற்குள்ளேயே அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் வெற்றி படத்தை கொடுத்த தேசிங்கு பெரியசாமி என்பவரை சமீபத்தில் சந்தித்து உள்ளார் அவர் ஒரு படத்தின் கதையை ஒன்லைனில் சொல்லி உள்ளார். மேலும் படத்தின் கதையை டெவலப் பண்ணி வையுங்கள் நான் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு வந்து பார்கிறேன் என் குறிப்பிட்டு இருந்தாராம்

இயகுனர் தேசிங்கு பெரியசாமி உடனடியாக கதையை ரெடி செய்து உள்ளதால் விரைவில் ரஜினி கதையைக் கேட்டுவிட்டு ஜூன் அல்லது ஜூலை யில் ரஜினி கலந்து கொண்டு  படத்தை தொடங்குவார் என தெரியவருகிறது இதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் இணைவார் என தெரிகிறது.

ரஜினி ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி சம்பளம் வாங்குவதால் அவர் அவ்வளவு எளிதில் தனது ஓய்வை அறிவிக்க மாட்டார் தொடர்ந்து படங்களில் நடிப்பதையே அதிகம் ஆர்வம் காட்டுவார் அதனாலதான் சிறப்பு கூறிய இயக்குனர்களை கண்டுபிடித்து பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கிறார்.

அந்த வகையில் தேசிங்கு பெரியசாமி ரஜினி லிஸ்டில் இணைந்து உள்ளார் எனவும் ஒரு பக்கம் முதலில் கூறுகின்றன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment